தாயுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தாயுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

காவல் நிலையம் 

அறந்தாங்கி அருகே தாயுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஆறாம் வீதியில் வசிக்கும் டூவீலர் மெக்கானிக்கான மணிகண்டன் தாயுடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இந்த நிலையில் தகவல் அறிந்த காவலத்துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story