திருட்டு வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்

திருட்டு வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்

நீதிமன்றம் 

திருட்டு வழக்கில் போலீஸ் தேடிய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் திருட்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை அவனியாபுரம் கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாசன் (வயது 27) என்பவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், திருட்டு வழக்கில் தொடர்புடைய அவர் நேற்று சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி யுவராஜ் முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்ரீராம் சீனிவாசனை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story