அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
வாலிபர் கைது
தஞ்சை அடுத்த சாலியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (39) அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை முதுகலை பட்டப் படிப்பு படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்தபோது, அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பணியாற்றிய காளியப்பன் என்பவரின் மகன் அருண்குமார் ( 35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தான் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு பார்ப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல தவணைகளாக நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தையும் திருப்பி தரவில்லை, வேலையும் வாங்கித் தரவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் அண்ணன் காமராஜ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story