விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது !

விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது !

வாலிபர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பிலிமுத்திரை கிராம பகுதியில் இன்று தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு காடுசிவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (25) என்ற வாலிபர் அப்பகுதியில் உள்ள நர்சரி தோட்டத்தில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நர்சரி தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர். சோதனையில் அங்கிருந்த புதரில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை பார்த்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். உரிய அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக வாலிபர் முனிராஜை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முனிராஜை போலீசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story