ராணிப்பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது..

ராணிப்பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது..

போதை மாத்திரை விற்ற வாலிபர்


ராணிப்பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை அருகே சிப்காட் போலீசார் அவரைக்கரையில் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20) என்ற வாலிபர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்தார். போலிசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மெடிக்கலில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அதை கரைத்து ஊசி மூலம் கை நரம்பில் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஹரிஷ் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து போதை மாத்திரைகள் விற்ற மேல்விசாரத்தைச் சேர்ந்த முகமது சுல்தான் (20) என்ற வாலிபரை கைது செய்தனர் மேலும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story