இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

காவல்துறை விசாரணை


திண்டிவனம் போலீசார் வாலிபரை கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையி லான போலீசார் திண்டிவனம் இந்திரகாந்தி பஸ் நிலையம் அருகில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தபோது, அதில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 4 மதுபாட் 5 டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் ராகுல்காந்தி (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 10 லிட்டர் சாராயம் மற்றும் 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story