வெள்ளியணை அருகே தங்க நகையை களவாடிய வாலிபர் கைது

வெள்ளியணை அருகே விட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை களவாடிய வாலிபர் கைது.மேலும் திருடிய நகையையும் காவல்துறையினர் மீட்டனர்.
கரூர் மாவட்டம், தெற்கு வெள்ளியணை, பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 27. இவர் ஜனவரி 26-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பணி முடித்து வீடு திரும்பிய போது, வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மாயமானது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பாலகிருஷ்ணன். இந்த சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக குற்றவாளியை தேடி வந்தனர் காவல்துறையினர். இந்நிலையில், இந்த திருட்டு தொடர்பாக, அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் வயது 34 என்பவர், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் திருடிய நகையையும் காவல்துறையினர் மீட்டனர். மேலும், சதீஷ்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல் துறையினர்.

Tags

Next Story