டூவீலர் வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம்

டூவீலர் வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம்

போலீஸ் 

டூவீலரை வேகமாக ஓட்டிச் சென்றதால், கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, எலவனூர் அருகே உள்ள எல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ரமேஷ் குமார் வயது 36. இவர் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் சின்ன தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் சூடாமணி கஸ்பா தோட்டம் அருகே உள்ள மல்லேஸ்வரன் தோட்டம் அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரமேஷ் குமாருக்கு தலை, இடது கால் முட்டி, மூக்கு,இடது கண் புருவம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரமேஷ் குமாரின் மனைவி ஜூலியட் மேரி வயது 36 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை விபத்து ஏற்படும் வகையில் வேகமாக ஓட்டிய ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags

Next Story