சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

சரக்கு வேன் மோதி வாலிபர் பலி
விபத்தில் பலி
தஞ்சையில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் சாண்டில் பிரசன்னா (வயது 35). மசாஜ் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை ஒரு வேலையின் காரணமாக தஞ்சை விளார் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாலம் செல்லும் வழியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சாலையோரத்தில் செல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் சாண்டில் பிரசன்னா மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாண்டில்பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் சத்தியராஜை (38) கைது செய்தனர்.

Tags

Next Story