கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

திருச்சி அருகே பெரிய ஆலம்பட்டிபுதூரில் கோயில் உண்டியலை உடைத்துத் திருட முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


திருச்சி அருகே பெரிய ஆலம்பட்டிபுதூரில் கோயில் உண்டியலை உடைத்துத் திருட முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பெரிய ஆலம்பட்டிபுதூரில் உள்ள பிள்ளையாா் கோயில் உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா் ஒருவா், வேலினால் கோயிலுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, திருட முயற்சித்துக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த ஊா் மக்கள், அந்த நபரைப் பிடித்து இனாம்குளத்தூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாரின் விசாரணையில் அவா், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெருமாம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த அண்ணாவி மகன் லோகேஸ்வரன் (19) என்பதும், கை செலவுக்காக கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பணத்தை திருட முயன்றதும், இவா் மீது திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், பெரிய ஆலம்பட்டிபுதூரைச் சோ்ந்த கோகுல் என்பவரின் புகாரின்பேரில் லோகேஸ்வரனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story