மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் படகு கவிழ்ந்து பலி

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் படகு கவிழ்ந்து பலி

நரேந்திரன் 

செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் நரேந்திரன் (23). இன்று அதிகாலை தனது படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். கடல் மேல் மட்டத்தில் காற்று அதிகமாக வீசியதால் கடலில் அலைகளில் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் படகை நிலை நிறுத்த முடியாமலும் கரைக்கும் வர முடியாமலும் தத்தளித்த இளைஞர் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால் படகுக்கு அடியில் படகின் இன்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டதால் படகிலிருந்து வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து கூவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story