நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் கைது

விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற வாலிபர் கைது. மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை 5:00 மணியளவில் எறையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், எறையூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் கிளி என்கிற கில்பர்ட், 24; எனவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிளியை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story