ஆதார் பதிவு, திருத்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம்

ஆதார் பதிவு, திருத்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம்

fileimage

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு, திருத்தம் மேற்கொள்ளலாம் என்று முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் வார வேலை நாட்களில் ஆதார் சேவை மையத்தில் புதிதாக ஆதார் பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் திருத்தம் ஆகிய சேவைகள் வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செய்யப்பட்டு வருகிறது.

இன்று அக்டோபர் 22ம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இதற்கான சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story