பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் திருத்த முகாம்

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் திருத்த முகாம் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாடப்புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத், தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியப் பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story