ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை:அஞ்சல் அதிகாரி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை:அஞ்சல் அதிகாரி அறிவிப்பு

  தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தலைமை தபால் நிலைத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) செ. சுரேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 07.07.2024 தேதி முதல் 31.08.2024 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை செயல்படும். பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story