ஆதார் சிறப்பு முகாம்

திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதியதாக ஆதார் எடுக்கவும் ஏற்கனவே ஆதார் கார்டு இருக்கிறவர்கள் ஆதார்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாவட்டம் முழுவதும் ஆதார் மையங்கள் மற்றும் இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு செல்கிற பொதுமக்கள் ஆதார் தொடர்பான தங்களது திருத்தங்களை செய்துகொள்கிறார்கள். இதுபோல் புதியதாகவும் ஆதார் கார்டு எடுக்க விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆதார் சேவை மையங்கள் தாலுகா அலுவலகங்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை.

இதுபோல் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படுவதில்லை. இதற்கிடையே வேலைக்கு செல்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ , மாணவிகளின் வசதிக்காக ஆதார் மையங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு தாலுகா வாரியாக சுழற்சி முறையில் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 74 பேர் வரை கலந்துகொண்டு புதிய ஆதார் கார்டு பெறவும் , ஏற்கனவே உள்ள ஆதார் கார்டுகளில் முகவரி மாற்றம் , தொலைபேசி எண் மாற்றம் , புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். இந்த முகாமில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டிருந்தனர். விடுமுறை நாட்களில் இது போன்ற முகாம்கள் அமைப்பது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story