துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம்

துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம்

ஆதார் சேவை முகாம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் துணை அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஜூலை 5ம் தேதி வரை ஆதார் சிறப்பு சேவை முகாம் நடக்கிறது. விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் விடுத்துள்ள செய்திகுறிப்பு; விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் விருத்தாசலம் ஆகிய துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.

இதில் கட்டணமின்றி ஆதார் புதியதாக எடுத்து கொள்ளலாம். இதற்கு குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வர வேண்டும்.

அதேபோல் உரிய ஆவணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வந்து பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story