அமமுக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

அமமுக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்!

 அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடியில், அமமுக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெ.சுதா என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி இ்னறு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், தூத்துக்குடி மணிகண்டன், முகமது காலிப் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story