மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனித் திருவிழா துவக்கம்

மீனாட்சி சொக்கநாதர் கோவிலில்  ஆனித் திருவிழா துவக்கம்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபக்கொடியை பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வந்தனர். காலை 10:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். ஜூன் 17ல் கழுவன் விரட்டு, ஜூன் 18ல் ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஜூன் 19ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், ஜூன் 20ம் தேதி கோயில் தேரோட்டமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story