சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை

சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை

சீரடி சாய்பாபா

சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் மார்கழி மாத வியாழக்கிழமையை யொட்டி ஆரத்தி பூஜை, அன்னதானம், சப்பர பவனி நடந்தது. இதையொட்டி வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளாலே சாய்பா பாவிற்கு பால் அபிஷேகம் செய்து செந்தாமரம் வீசி பூஜை செய்தனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கையாக புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலையில் சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

Tags

Next Story