ஆத்தூர் : கல்லாந்த்ததில் MLA நீர்த்தேக்க திட்ட அமைக்க பூமி பூஜை.

ஆத்தூர் அதையே கல்லாநத்தம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லாநத்தம் ஊராட்சியில் அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு எம்எல்ஏ இடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வி பி சேகர், ஒன்றிய கழக துணைச் செயலாளர் பெரியசாமி, கல்லாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story