ஆத்தூர் : ஸ்டாலின் பிறந்தநாள் ஏழை மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கல்.

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் புஷ்பா கதிர்வேல் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு வார்டு பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் கலந்துகொண்டு தையல் மிஷின், மளிகை பொருட்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நகர நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story