ஆத்தூர் : முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சி குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆத்தூர் அருகே ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமான குழந்தைகள் பொதுமக்கள் நீர்வீழ்ச்சியில் குளித்தும் படகு சவாரி செய்தும் பூங்காவில் விளையாடியும் மகிழ்ச்சி.
ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம் விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குவிந்தனர். இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க குழந்தைகள் பெரியவர் சிறியவர் என அனைவரும் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். மேலும் முட்டல் ஏரியில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரியும் செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story