நாகர்கோவிலில் மழலையர் பள்ளியை திறந்து வைத்த ஆயர்

நாகர்கோவிலில் மழலையர் பள்ளியை திறந்து வைத்த ஆயர்
மழலையர் பள்ளி திறந்த ஆயர்

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன புதிய கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். குழந்தை களை கவரும் வகையில் நவீன வசதிகளுடன் குளி ரூட்டப்பட்ட வகுப்ப றைகளுடன் மழலையர் பள்ளிக்க ட்டிடம் அமைந்துள்ளது.

தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில், பள்ளி தாளாளர் சனில் ஜாண், துணை தாளாளர் ஜார்ஜ் கண்டத்தில், பள்ளி முதல்வர் லிஸ்பெத், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர் சந்திரபோஸ், மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story