ஊத்தங்கரை அருகே மாணவி கடத்தல்: போக்சோவில் உறவினர் கைது

ஊத்தங்கரை அருகே மாணவி கடத்தல்: போக்சோவில் உறவினர் கைது

கைது செய்யப்பட்டவர் 

ஊத்தங்கரை அருகே மாணவி கடத்ததிய உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தத்தை சேர்ந்தவர் வனிதா வயது 33. கூலி தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பவித்ரா வயது 17.

இவரை கடந்த மே மாதம் 17ஆம் தேதி உறவினரான சேலம் மாவட்டம் தாதம்பட்டியை சேர்ந்த சக்திவேல் வயது 33 என்பவர் கடத்திச் சென்றதாக வனிதா ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் ஊத்தங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சக்திவேலை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனி தலைமையில் தனிப்படை போலீசார் அனுமன் தீர்த்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது பவித்ராவுடன் சக்திவேல் பஸ் நிறுத்தத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

பவித்ராவை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சக்திவேலை போக்சோவில் கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சக்திவேல் மீது சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பவித்ராவுக்கு சக்திவேல் சித்தப்பா முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story