ஏசி வெடித்து தீ விபத்து - ஒருவர் பலி!

ஏசி வெடித்து தீ விபத்து - ஒருவர் பலி!

பலி

செய்யாறு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏசி வெடித்து உடல் கருகி ஒருவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெங்கட்ராமன் பேட்டை பகுதியைச் சேர்ந்த காமராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டில் உள்ள ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்தது.

இந்த தீ விபத்தில் காமராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காமராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story