சேலம்: ஏசி மெக்கானிக்கிற்கு ஏற்பட்ட விபரீதம்

சேலம்: ஏசி மெக்கானிக்கிற்கு ஏற்பட்ட விபரீதம்

ஏசி மெக்கானிக் தவறி விழுந்து படுகாயம் 

சேலத்தில் தனியார் நிறுவனத்தில் ஏசி பொருத்த சென்று வாலிபர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் தாதகாப்பட்டி சிங்கார முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 20). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் செல்வம் ஏ.சி.யை பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, சுவரில் துளைபோட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலை பார்த்த செல்வத்துக்கு பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காததால் ஏ.சி. நிறுவன நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் ஏ.சி. பொருத்திய தனியார் நிறுவன நிர்வாகி பிரசன்னா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story