பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்த ஏசி மெக்கானிக் - போலீசார் விசாரணை

பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்த ஏசி மெக்கானிக் - போலீசார் விசாரணை

பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்த ஏசி மெக்கானிக் - போலீசார் விசாரணை

குளச்சல் அருகே பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை இருக்கையடியில் சந்தேகத்திற்கு இடமாக இறந்து கிடந்த ஏசி மெக்கானிக் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் பகரைன் நாட்டில் ஏ சி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அவரது மனைவியும் அதே நாட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார். பிள்ளைகள் பகரைனில் தாயுடன் தங்கி படித்து வருகின்றனர்.கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் மட்டும் சொந்த ஊர் திரும்பினார். வீட்டில் தனியாக வசித்து வந்த செல்வராஜ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை செல்வராஜ் கல்லுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை இருக்கையடியில் சந்தேகத்திற்கு இடமாக இறந்து கிடப்பதாக அவரது சகோதரர் தேவராஜ் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தேவராஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சம்பவமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story