வெளிப்பாளையம் துணை அஞ்சல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வெளிப்பாளையம் துணை அஞ்சல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஊழியர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் துணை அஞ்சல் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல்-2024ஐ முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதம் வாக்குபதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் துணை அஞ்சல் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல்-2024ஐ முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் .பேபி தலைமையில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story