தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜோதிபாசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முகமது,இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராசு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மணிமாறன்,நகர குழு உறுப்பினர் பயாஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சி.சண்முகம்,இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் ராணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அக்பர் பாஷா,மமக நகர தலைவர் ரப்பாணி(எ)சாதிக் பாஷா,மமக நகர செயலாளர் நிசார் பாஷா, ஊடக அணி பொருளாளர் சலீம் மாலிக் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story