பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழி - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தலைமையில் ஏற்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (24.02.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனா். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டெண்ட்யை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் க.மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story