தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும், ஆலங்காயம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும், ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழு நேர மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.‌ மேலும் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு உறுதி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில், மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story