எஸ்பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

எஸ்பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
 எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள்
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு புதிய எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் 22 ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாச பெருமாள் இன்று முறைப்படி பதிவேடுகளில் கையொப்பமிட்டு பதவி ஏற்றார். இந்த நிலையில் பதவியேற்ற அடுத்த தருணமே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சீனிவாசபெருமாள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றார். இந்த தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story