பெண்கள் பாதுகாப்பு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பெண்கள் பாதுகாப்பு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பெண்கள் பாதுகாப்பு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

பெண்கள் பாதுகாப்பு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தலின்படி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி ஆலோசனையின்படி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் தலைமையில் வட்டார இயக்க மேலாளர் தனமணி முன்னிலையில் தொடங்கியது. இவ்விழிப்புணர்வில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் சட்டம் (2012),குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006) பற்றியும்,குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றியும் மற்றும் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து பாதுகாப்பு, பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது, பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண் கல்வியை ஊக்குவிப்போம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்,குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தியேந்தி பேரணியாக சென்றனர்.மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் என 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story