வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு துாண்டுதலுமின்றயும் வாக்களிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர் . இதில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story