தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

மாவட்ட ஆட்சியர் 

தூத்துக்குடி மாநகராட்சியின் 13வது புதிய ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் பொறுப்பேற்றுக் காெண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாநகராட்சியில் சுகாதாரம், சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். புதிய ஆணையருக்கு மாநகர கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், துணைப் பொறியாளர் சரவணன் செயற் பொறியாளர் ரங்கநாதன், துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர்கள் ராமசந்திரன்,

தனசிங், சேகர், சொர்ணலதா, சுகாதார அலுவலர் சுமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள மதுபாலன் 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்.

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 71வது இடத்தைப் பிடித்தார். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றவர். மதுரை மாநகராட்சி ஆணையர், கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றியவர்.

Tags

Next Story