பழைய காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து

பழைய காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து

வெடித்த நாட்டு வெடிகுண்டுகள் 

கூடுவாஞ்சேரி பழைய காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த விபத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலர் சரவணன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story