வெள்ளகோவிலில் பஸ் மோதி நடந்து சென்ற வேன் டிரைவர் பலி

வெள்ளகோவிலில் பஸ் மோதி நடந்து சென்ற வேன் டிரைவர் பலி

ராஜேஷ்குமார்

வெள்ளகோவிலில் அரசு பஸ் மோதியதில் நடந்து சென்ற வேன் டிரைவர் பலியானார்.

வெள்ளகோவில் போலீஸ் தரப்பில் விபத்து குறித்து கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், முத்தூர் ரோடு, அறிவொளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (வயது 34). இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு பிரபா (5), தர்ஷிதா(3) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஷ்குமார் வெள்ளகோவில்-கோவை ரெகுலர் சர்வீசில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எண்ணெய் ஆலை அருகில் நடந்து சாலையை கடந்துள்ளார்.அப்போது காங்கயத்திலிருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் ராஜேஷ்குமார் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்,பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் அரசு பஸ் டிரைவர் ராஜகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story