ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ- வேன் மோதி விபத்து

ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ- வேன் மோதி விபத்து

பைல் படம்

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்த ஆட்டோ திடீரென வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் வில்சன் ஜெயக்குமார் (வயது36). இவர் ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளையில் உள்ள ஒரு தனியார் வலை கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை ராஜாக்கமங்கலத்தில் இருந்து பருத்திவிளை நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். பிள்ளையார் விளை பகுதியில் சென்றபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்த ஆட்டோ திடீரென வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நெருங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த மேலசங்கரன்குழி அருகே உள்ள குறண்டி பகுதியை சேர்ந்த தளவாய் (55) என்பவர் படுகாயம் டைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story