மரக்காணம் அருகே விபத்து: ஒருவர் பலி

மரக்காணம் அருகே விபத்து: ஒருவர் பலி

விபத்தில் சிக்கிய கார்

மரக்காணம் அருகே விபத்தில் ஒருவர் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பரைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகேஷ் மற்றும் அப்பகுதியில் உள்ள இவரது நண்பர்கள் சதீஷ், ஹரிஷ், ஹரி.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட ஒரே காரில் இ.சி.ஆர் சாலை வழியாக புதுவைக்கு வந்தனர். இவர்கள் வந்த கார் மரக்காணம் அருகே பனிச்சமேடு கிராமம் என்ற இடத்தில் வந்த போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவர்கள் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுகேஷ் நேற்று காலை இறந்துவிட்டார். மற்ற நபர்கள் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சுகேஷின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story