மயிலம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து மூன்று பேர் காயம்

மயிலம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து மூன்று பேர் காயம்

விபத்து 

மயிலம் அருகே கார் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் டவுன், பார்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 57; இவரது மனைவி சுஜிதா, 50; இருவரும் சென்னைக்கு சொந்த வேலையாக ஹூண்டாய் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்தி, 40; என்பவர் ஓட்டினார்.நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேணிப்பட்டு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார்த்தி, 40; சுரேஷ்பாபு, சுஜிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.உடன் 3 பேரும், மயிலம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story