சங்ககிரி அருகே விபத்து: அதிமுக பிரமுகர் பலி

சங்ககிரி அருகே விபத்து:  அதிமுக பிரமுகர் பலி

விபத்தில் பலியானவர்

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து அதிமுக பிரமுகர் ஒருவர் பலி 5 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் பலி 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜா (55)இவர் தனது சொகுசு காரில் நண்பர்கள் 5 பேருடன் நேற்று மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவு சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டி வந்த ஓமலூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவருடன் சொகுசு காரில் பயணம் செய்த அவரின் நண்பர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் நண்பர்களுடன் கோயிலுக்கு சென்ற அதிமுக பிரமுகர் பலியானதோடு 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story