பைக் விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை

பைக் விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில் குற்றவாளிக்கு  சிறை

குற்றவாளிக்கு சிறை

குருந்தன்கோடு பகுதியில் பைக் விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை இரணியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு
குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் பென்சிகர் ( 21) இவர் கடந்த 2010-ம் வருடம் தனது நண்பர்களுடன் குருந்தன்கோடு தனியார் திருமண்டபம் அருகில் நண்பர்களுடன் இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது குருந்தன்கோடு செக்காரவிளை பகுதியை சேர்ந்த ஜோண்ஷ் (41) என்பவர் மோட்டா பைக்கில் குருந்தன்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதில் திடீரென ஆல்பட் பென்சிகர் மீது ஜோண்ஸ் ஓட்டி சென்ற பைக் மோதிய விபத்தில் ஆல்பட் பென்சிகர் உயிரிழந்தார். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், நேற்று இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமீர்தீன் விபத்தை ஏற்படுத்தி இறந்ததற்க்காக 2 வருட சிறைதண்டனையும், பதினொன்றாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி வாதாடினார்.

Tags

Next Story