தென்காசி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை:பொதுமக்கள் புகார்

தென்காசி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை:பொதுமக்கள் புகார்
ஊராட்சி மன்றத் தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
தென்காசி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி மன்றத் தலைவர் குத்தாலிங்கம், அரசின் நிதிகளை மக்கள் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை தட்டிக் கேட்கும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story