குறைந்த ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குறைந்த ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை அலுவலகம் 

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் துறையினர் நடத்திய ஆய்வில் குறைந்த ஊதியம் வழங்கிய 5 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா நேற்று (மார்ச் 6) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என 23 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிய ஐந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story