கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

உரம்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரி குமார் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ சாகுபடி தீவி ரமாக நடந்து வருகிறது. எனவே, விவசாய தேவைக்கான யூரியா மற்றும் உரம் கையிருப்பில் வைக்கப்பட் டுள்ளது.மேலும், மணலியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,800 மெட்ரிக் டன் எம்எப் எல் யூரியா மற்றும் காட்பாடியிலிருந்து 650 மெட் ரிக்டன் கிரிப்கோ யூரியா மற்றும் 1538 மெட்ரிக்டன் என்எப்எல் யூரியா திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதில், 1938 மெட்ரிக் டன் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2050 மெட்ரிக் டன் யூரியா தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்ப திட்டமிட்டப்பட்டுள்ளது.நடப்பு மாதத்தில், 6,429 மெட்ரிக் டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. மேலும், நடப்பு பருவத்திற்கு தேவையான 7164 மெட்ரிக் டன் யூரியா, 2194 மெட்ரிக் டன் டிஏபி, 962 மெட்ரிக் டன் பொட் டாஷ், 513 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5922 மெட்ரிக் டன் காம்ப் ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அல் லது தனியார் உர விற்ப னை நிலையங்களில் ஆதார் எண்ணுடன் மண் வள அட்டை பரிந்துரைப் படி பெற்றுக்கொள்ள லாம். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுத லாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.மேலும், செயற்கை முறையில் யூரியா மற்றும் உர தட்டுப்பாடு ஏற்படுத் தினால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story