நாமக்கல்லில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அதிரடி ஆய்வு!

நாமக்கல்லில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அதிரடி ஆய்வு!

 ச.உமா 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சி, ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (25.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் வட்டம், ஆலாம்பாளையம் பேரூராட்சி, பட்டேல் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முடிவுற்றுள்ள பணிகளின் விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆனங்கூர் பகுதியில் வேதியியல் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவது குறித்து தனியார் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நிறுவனத்தில் தயாரிக்கப்படும் வேதிப்பொருட்கள், அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது, வேதியியல் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். முன்னதாக, நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story