மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஏ.பி.முருகானந்தம்!

மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஏ.பி.முருகானந்தம்!

முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பு 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சைபடுத்தி முகநூலில் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை:கிருஷ்ணகிரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து அதன் தலையை வெட்டிய விவகாரம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க மாநில பொது செயலாளர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்வினையாக தேவராஜ் என்ற பெயரில் முகநூல் ஐ.டியில் இருக்கும் நபர் தகாத வார்த்தையில் திட்டி கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மிரட்டலை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில் முகநூல் மூலம் கொலைமிரட்டல் விடுத்த தேவராஜ் என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது எனவும் தேர்தல் முடிவுகளை ஏற்று மக்களுக்கு பாடுபட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார் தேர்தல் காழ்புணர்ச்சி காரணமாக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும் நடுரோட்டில் ஆட்டின் மீது அண்ணாமலை படத்தை போட்டு வெட்டி உள்ளனர்.

இது மாதிரியான செயல்களை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதாகவும் யாரையும் கைது செய்யாமல் உள்ளதாக கூறியவர் என்னுடைய முகநூல் கணக்கில் எங்களை கண்டம், துண்டமாக வெட்டுவோம் என பதிவிட்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.யார் அந்த நபர்?அரசியல் காரணங்கள் இருக்கின்றதா என விசாரிக்க வேண்டும் என்றவர் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழிசை - அமித்ஷா இடையிலான பேச்சு கண்டிப்பு குறித்த கேள்விக்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கலாம் என மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்தார்.

Tags

Next Story