விதிமீறலில் ஈடுபட்ட 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிமீறலில் ஈடுபட்ட 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளர் துறை அலுவலகம் 
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகளில் எடை கருவிகளை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபட்ட 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு கொண்டனர்.இதில் விதிமீறலில் ஈடுபட்ட 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு உதவி ஆணையர் பாலமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story