பூந்தமல்லியில் செயல்வீரர்கள் கூட்டம் -சசிகாந்த் செந்தில் பங்கேற்பு

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் பூந்தமல்லியில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் பூந்தமல்லியில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்வில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டினார்.

மேலும் இந்நிகழ்வில் திமுகவின் திருவள்ளூர் மைய மாவட்ட செயலாளர், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆவடி நாசர், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.M.கிருஷ்ணசாமி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திரு.கிரிராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு.செந்தமிழ் அரசு,பூவிருந்தவல்லி மாவட்ட தலைவர் திரு.தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. ஜேம்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )மாவட்ட செயலாளர் திரு. சம்பத், விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர் கௌதமன் கோபு, மாவட்ட செயலாளர் அருண் கெளதம், மதிமுக மாவட்ட தலைவர் திரு. பாபு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் மௌலானா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் TMM. சேக்தாவுத், மக்கள் நீதி மய்யம் பூவை மாவட்ட செயலாளர் பாசில், தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story